வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இரு சிறுவர்கள் காயம்!!

1016

விபத்தில்..

வவுனியா, மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரு சிறுவர்கள் காயமடைந்துள்ளதுடன், விபத்தை ஏற்படுத்திய மோட்டர் சைக்கிள் தப்பிச் சென்றுள்ளது.

இன்று (19.09.2020) இரவு 7 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, குருமன்காடு பகுதியில் இருந்து மன்னார் வீதியில் இரு சிறுவர்களை ஏற்றிச் சென்ற மோட்டர் சைக்கிள் பட்டாணிச்சூர் முதலாம் ஒழுங்கையில் திரும்ப முற்பட்ட வேளை எதிரே வந்த மோட்டர் சைக்கிள் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் தனியார் கல்வி நிலையத்தில் இருந்து தந்தையுடன் பயணித்த இரு சிறுவர்களும் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய மோட்டர் சைக்கிள் தப்பிச் சென்றுள்ளது. விபத்து தொடர்பில் வவுனியா போக்குவரத்து பொலிசார் வி சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.