வவுனியாவில் கிணற்றிலிருந்து வெ டிபொருட்கள் மீட்பு!!

635

கிணற்றிலிருந்து..

வவுனியா வடக்கு கட்டையர்குளம் மதியாமடு பகுதியில் கிணற்றில் இருந்து பெருமளவான வெ டிபொருட்களை புளியங்குளம் பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் தனியார் காணி ஒன்றில் அமைந்துள்ள கிணறு ஒன்றை அதன் உரிமையாளர் இன்று (20.09.2020) துப்புரவு செய்துள்ளார்.

இதன்போது கிணற்றில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்த நிலையில், புளியங்குளம் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்திருந்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் கிணற்றிலிருந்து 8 மோட்டார் செல்லினை முதற்கட்டமாக மீட்டிருந்தனர்.

குறித்த கிணற்றில் மேலும் வெ டிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நீதி மன்றின் அனுமதியுடன் தே டுதல் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.