வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கும் திட்டம் முன்வைக்கப்படும் : கு.திலீபன் எம்.பி!!

910

வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கும் ஒரு திட்டத்தினை முன்வைத்து அங்கிருந்தும் பேரூந்து சேவைகள் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்படும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தெரிவித்தார்.

வவுனியாவில் நிகழ்வோன்றில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்த தெரிவித்த அவர்

புதிய பேரூந்து நிலையத்தில் பேரூந்துகள் சீராக செயற்பட ஒரு திட்டத்தினை முன்வைக்கும் போது பழைய பேரூந்து நிலையத்தில் இருந்தும் சேவைகள் இடம்பெற திட்டம் முன் வைக்கப்படும்.

அதற்கு தனியார் பேரூந்து உரிமையாளர்களின் ஒத்துழைப்பு தேவை. இரண்டு பேரூந்து நிலையத்திற்கும் சம்மதம் தேவையாகவே உள்ளது. அதனை நடைமுறைப்படுத்துவோம்.

அத்துடன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மயூரன் போ தைப்பொ ருள் தொடர்பாக கருத்துக்களை முன்வைத்திருந்தார். ஆனால் போ தைப்பொ ருளுக்கு எதிராக நான் கருத்து தெரிவித்தால் சிரிக்கும் அமைப்பு சிரிக்காத அமைப்பு என்று சில கட்சிகள் எனக்கு எதிராக செயற்படுகின்றனர்.

போலி முகநூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது தவசிகுளத்தில் ஈ.பி.டி.பி உறுப்பினர் வீட்டில் க ஞ் சா பாவனை என. என்னை எப்படி குறை கூறலாம் என திட்டம் போடுகின்றனர்.

ஆனால் நான் வலுவாக ஒரு திட்டத்தினை அவர்களுக்கு கொடுக்கப்போகின்றேன். நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டேன் வென்றுவிட்டேன். ஆனால் சிலர் 5 வருடங்களுக்கு பல தேர்தலில் போட்டியிட வேண்டியுள்ளது.

நீங்கள் செய்த திருகுதாளங்களை நான் வெளியில் விட்டால் அவர்களுக்கு இருப்பதும் இல்லாமல் போகும் நிலை ஏற்படும். அதனை விரைவில் செய்வேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.