வவுனியா உள்ளூராட்சி சபைகளுக்கு இரு புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு!!

865

புதிய உறுப்பினர்கள்..

இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் வவுனியாவின் இரு உள்ளூராட்சி சபைகளுக்கு புதிய இரு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா நகரசபையின் இறம்பைக்குளம் வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செந்தில்ரூபன் நீல் சாந்த தலைமையிலான வன்னி மக்கள் காப்பகம் அணியில் இணைந்து செயற்படும் நிலையில் அவர் குறித்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அவரது வெலற்றிடத்திற்கு அப் பகுதியைச் சேர்ந்த பே.கிறிஸ்தோபர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சாஸ்திரிகூழாங்குளம் வட்டார உறுப்பினராக வெற்றி பெற்று தெரிவு செய்யப்பட்ட ப.சத்தியநாதன் பதவி விலகிய நிலையில், அருடைய இடத்திற்கு கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த பெ.இராமகிருஸ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இருவரும் இலங்கை தமிரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட தலைவரும், முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சருமான ப.சத்தியலிங்கம் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.