வவுனியாவில் வீசிய கடும் காற்றினால் முறிந்து வீழ்ந்த மரங்கள்!!

1509

கடும் காற்றினால்..

வவுனியா ஏ9 வீதி நீதிமன்றத்திற்கு அருகில் நின்ற பாரிய மரம் கடும் காற்று காரணமாக முறிந்து விழுந்ததில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

குறித்த முதிரைமரம் அடியோடு சரிந்து விழுந்ததில் மின்சார கம்பங்கள் உடைந்து மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

அத்துடன் வவுனியா வீதி அபிவிருத்தி நிறைவேற்று பொறியியலாளர் அலுவலகத்தின் பெயர் பதாதை சேதமடைந்துள்ளதுடன், அலுவலகத்திற்கு செல்லும் பிரதான பாதையும் தடைப்பட்டுள்ளது.

மேலும், நீர் விநியோகமும் பகுதியளவில் பாதிப்படைந்துள்ளதாக தெரியவருகிறது. இந்த நிலையில் அவ்விடத்திற்கு விரைந்த மின்சார சபையினர் மின்சார இணைப்புக்களை சீர்செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக வவுனியாவில் கடும் வெப்பமான காலநிலை நிலவி வந்ததுடன் தற்போது மாலை வேளைகளில் அதிக காற்றுடனான காலநிலையாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.