வவுனியாவில் பகல் வேளையிலும் மோட்டார் சைக்கிள்களில் மின் குமிழை ஒளிரச்செய்யுமாறு உத்தரவு !!

693

Motor Cycleவவுனியாவில் பகல் வேளையிலும் வீதியில் பயணிக்கும் மோட்டார் சைக்கிள்களில் மின்குமிழை ஒளிரச்செய்யுமாறு வவுனியா பொலிஸார் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மேல் மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம் வெற்றியளித்துள்ள நிலையிலேயே தற்போது ஏனைய மாவட்டங்களுக்கும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியா பொலிஸார் நேற்று மதியத்திலிருந்து வீதியால் செல்லும் அனைத்து மோட்டார் சைக்கிள்களையும் மின்குமிழ்களை ஒளிரச்செய்யுமாறு உத்தரவு பிறப்பித்து வருகின்றனர்.