வீதியை விட்டு விலகிய பஸ்: இரு சிறுவர்கள் பரிதாப பலி..!

504

கேகாலை, ரம்புக்கன பிரதான வீதியில் தளுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி வீதியில் சென்றவர்கள் மீது மோதியதில் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார்.

பெண் ஒருவருடன் வீதியில் சென்று கொண்டிருந்த சிறுவர்கள் இருவரே பஸ் சில்லுகளுக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர்.

இன்று (22) இடம்பெற்ற இவ் விபத்தின்போது சம்பவ இடத்திலேயே இரு சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர்.

படுகாயமடைந்த பெண் ரம்புக்கன பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கேகாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பஸ் வண்டியின் சாரதி மற்றும் நடத்துனர் ரம்புகன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.