வவுனியாவில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு அஞ்சலிகள்!!

1158

எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு அஞ்சலிகள்..

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சென்னையில் நேற்று (25.09.2020) பகல் 1 மணியளவில் ம ரணமடைந்தார்.

இந்நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இன்று (26.09.2020) வவுனியாவில் பல்வேறு இடங்களில் அஞ்சலி பதாதைகள் வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக குருமன்காட்டுச்சந்தி, நகர முச்சக்கரவண்டி தரிப்பிடம், சந்தை, வவுனியா நகர் போன்ற பகுதிகளில் பல்வேறு தரப்பினரினால் அஞ்சலி பதாதைகள் வைக்கப்பட்டுள்ளன.

அவரது உடல் இன்று மதியம் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் போலீசார் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.