சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டி மழை காரணமாக தாமதம்..!

384

ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டி மழை காரணமாக தாமதமாகியுள்ளது.

இன்றைய இறுதிப் போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி, கூக் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்கொள்கின்றது.

இதன்படி நாணய சுழற்சியை வசப்படுத்திய இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.

இந்தநிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி ஆரம்பமாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.