வவுனியாவில் கடைகளைத் திறக்குமாறு ஒலிபெருக்கியில் பொலிஸார் எச்சரிக்கை!

1133

வவுனியாவில்..

வவுனியாவில் கர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்து வர்த்தகர்கள் கடையடைப்பை மேற்கொண்டுள்ள நிலையில் வவுனியா பொலிஸார் வர்த்தக நிலையங்களுக்கு சென்று வர்த்தக நிலையங்களை திறக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக பொலிஸார் ஒலிபெருக்கியூடாக கடைகளை திறக்குமாறும் அறிவித்தல் வழங்கி வருகின்றனர்.

தமிழ்த் கட்சிகள் ஒன்றிணைந்து வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.