வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 157 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பு!!

715

தனிமைப்படுத்தப்பட்ட 157 பேர்..

சீஷல்ஸ் நாட்டில் இருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா, பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 157 பேர் இன்றைய தினம் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கொவிட்-19 நோய் தாக்கம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் செயற்பாடுகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில்,சீஷல்ஸ் நாட்டில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் பம்மைபடு தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த நிலையில் 157 பேர் அவர்களது சொந்த இடங்களான காலி, களுத்துறை, மாத்தறை, இரத்தினபுரி, கொழும்பு,

குருணாகல், நீர்கொழும்பு, கேகாலை, அனுராதபுரம், யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற பகுதிகளிற்கு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பயணிகளிற்கான பீ.சி.ஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், கொரோனா தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் தமது சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் உள்ள எட்டு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து கடந்த நான்கு மாதங்களில் 4072 பேருக்கு மேற்பட்டோர் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.