வவுனியாவில் கவனயீர்ப்பு போ ராட்டம்!!

728

கவனயீர்ப்பு போ ராட்டம்..

‘எமக்கான நீதியை நாம் பெற ஏதுவாக இலங்கையை சர்வதேச நீதிமன்றிற்கு பாரப்படுத்து’ வவுனியாவில் வலிந்து கா ணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தினர் கவனயீர்ப்பு போ ராட்டம்.


நாளையதினம் (01.10) சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் கா ணாமல் போன தமது கு ழந்தைகளுக்கு நீதி கோரி குறித்த கவனயீர்ப்பு போ ராட்டம் வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (30.09.2020) காலை 11.00 மணியளவில் இடம்பெற்றிருந்தது.

தமிழ் குழந்தைகள் என்ன ப யங்கரவா திகளா? , எங்கள் உறவுக்காக நீதி சர்வதேச நீதியாகவே வழங்கப்பட வேண்டும் , இலங்கையில் போ ர்க்கு ற்றம் செய்தவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முற்படுத்துங்கள்,

சின்னஞ்சிறு சிறார்கள் என்ன ஆ யு த ம் ஏந்தியவர்களா? , பாடசாலை சென்ற மாணவன் எங்கே போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவண்ணம் போ ராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த கவனயீர்ப்பு போ ராட்டம் சுமார் இரு மணிநேரங்கள் இடம்பெற்றிருந்ததுடன் போ ராட்டத்தில் 30க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.