வவுனியா ஒமந்தையில் 9 முதிரைக்குற்றிகளுடன் ஒருவர் கைது!!

739

ஒமந்தையில்..

வவுனியா ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமோட்டை பகுதியில் 9 முதிரை மரக் குற்றிகளுடன் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாலமோட்டை காட்டுப்பகுதியில் சில நபர்களின் நடமாட்டம் காணப்படுவதாக ஒமந்தை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சிறு கு ற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சுகுமார் சுகந் தலைமையிலான பொலிஸார் காட்டுப்பகுதியில் விசேட சோ தனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது பாலமோட்டை காட்டுப்பகுதியில் முதிரை மரம் வெட்டப்பட்டு 9 குற்றிகளாக காணப்பட்டுள்ளதுடன் அவற்றையும் கைப்ப ற்றியதுடன் ச ந்தேகநபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காட்டுப்பகுதியில் மீட்கப்பட்ட 9 முதிரைக்குற்றிகளும் ஒமந்தை பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டுள்ள பாலமோட்டை பகுதியினை சேர்ந்த 41வயதுடைய நபர் பொலிஸ் த டுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலதிக வி சாரணையின் பின்னர் முதிரைக்குற்றிகளையும் சந்தேக நபரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குறிய நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.