வவுனியா ஓமந்தை பகுதியில் முதிரைக் குற்றிகளுடன் ஒருவர் கைது!

1131

ஓமந்தை பகுதியில்..

வவுனியா- ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமோட்டை பகுதியில் ச ட்டவி ரோதமான முறையில் க டத்திச் செல்லப்பட்ட முதிரை மரக்குற்றிகளை புளியங்குளம் விசேட அ திரடிப் படையினர் மீ ட்டுள்ளனர்.

பாலமோட்டை பகுதியில் முதிரை மரங்கள் க டத்தப்படவுள்ளதாக விசேட அதிரடிபடையினருக்கு இர கசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து இன்று (02) அதிகாலை, குறித்த பகுதியில் பா துகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப் படையினர், லொறி ஒன்றை வழி மறித்து சோ தனை மேற்கொண்டனர்.

இதன்போது, உமி மூட்டைகளால் மறைத்துவைக்கப்பட்டு க டத்தி செல்லப்பட்ட பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான 23 முதிரை மரக்குற்றிகள் கைப்ப ற்றப்பட்டு ள்ளதுடன்,

அவற்றை க டத்திச் செ ல்லப் பயன்பட்ட வாகனத்தையும் விசேட அதிரடிபடையினர் மீ ட்டுள்ளனர்.

குறித்த மரக்குற்றிகள் யாழ்.நோக்கி க டத்தி செ ல்லப்படவிருந்ததாக தெரிவித்த விசேட அதிரடிப்படையினர், கைப் பற்றபட்ட முதிரைக்குற்றிகளையும், கைது செய்யப்பட்ட நபரையும் நீதிமன்ற நடவடிக்கைகளிற்காக ஓமந்தை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.