வவுனியாவில் மூன்று மணிநேரத்தில் 22 பேர் கைது!!

1488

22 பேர் கைது..

வவுனியா பொலிஸார் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது மூன்று மணிநேரத்தில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று(02.10) மாலை மூன்று மணிநேரம் குறித்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

“கு ற்றச்செயல்கள் அற்ற வவுனியாவை உருவாக்குவோம்” என்ற தொனிப்பொருளில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடுவின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கமைய வவுனியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இந்த தேடுதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது பெண்களுடன் ப கிடிவதை கு ற்றச்சாட்டில் ஒருவரும், வழிப்பறி மற்றும் கொ ள்ளை கு ற்றச்சாட்டில் இருவரும், கேரளா க ஞ் சாவுடன் நால்வரும், ஹெ ரோ யி னு டன் ஒருவரும், நீதிமன்ற பிடியானை உத்தரவில் இருவரும்,

ம து போ தை யி ல் வாகனம் செலுத்திய கு ற்றச்சாட்டில் இருவரும், சந்தேகத்தின் அடிப்படையில் ஆறு பேரும், பொதுமக்கள் நடமாடும் பகுதியில் ம து பா ன ம் அ ருந்திய குற்றச்சாட்டில் நால்வரும் என 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 22 சந்தேகநபர்களும் வவுனியா பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் வைக்கப்பட்டு உள்ளதுடன், பொலிஸார் அவர்களிடம் வி சாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

வி சாரணைகளின் பின் கைது செய்யப்பட்ட நபர்களை வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.