சிறுவனுக்கு முத்தம் கொடுத்த ஆசிரியைக்கு சிறைத்தண்டனை!!

361

Kissingசிறுவன் ஒருவனிடம் தகாத முறையில் நடந்து கொண்ட பள்ளி ஆசிரியைக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்த நான்கு குழந்தைகளுக்கு தாயான 42 வயதுடைய பள்ளி ஆசிரியை ஒருவர், தனது மகனுடன் கால்பந்து அணியில் விளையாடும் 13 வயது சிறுவன் ஒருவனுக்கு அறிமுகமாகியுள்ளார். தொடர்ந்து பேஸ்புக் மூலம் நட்பை வளர்த்துக் கொண்டுள்ளார்.

இதன்பின்னர் பூங்கா போன்ற பொது இடங்களுக்கு ஒன்றாக சென்றிருந்த போது, குறித்த சிறுவனிடம் ஆசிரியை தவறாக நடந்து கொண்டுள்ளார், முரட்டுத்தனமாக முத்தமிட்டும் அநாகரிகமாக நடந்துக்கொண்டுள்ளார்.

இதனால் பையனின் கழுத்தில் காயம் ஏற்பட்டது, இதனை கவனித்த பையனின் தாயார் பொலிஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கவே ஆசிரியரை கைது செய்துள்ளனர்.

தன்மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றங்களை ஒப்புக்கொண்ட அந்த ஆசிரியைக்கு ஆறு மாத சிறைத் தண்டனையை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் ஆசிரியையாகவும், கல்வியாளராகவும் இருக்கும் இந்த பெண் இளம் வயது சிறுவனுக்கு தவறிழைத்து அழிக்க நினைக்ககூடாது என்றும், 13 வயது சிறுவனை தனது பாலியல் உணர்ச்சிக்கு பயன்படுத்திக்கொண்ட இந்த ஆசிரியையின் செயல் மிகவும் அநாகரீகமானது எனவும் தெரிவித்துள்ளார்.