வவுனியா மாவட்ட வர்த்தகர்களுக்கு வர்த்தகர் சங்கம் விடுத்துள்ள அறிவித்தல்!!

2868

அறிவித்தல்..

இலங்கையில் தற்போது கோவிட் -19 தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் நாட்டில் சில மாவட்டங்கள் முடக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு ஆலோசனைகள் தொடர்பில் பொலிஸ் மற்றும் சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக வவுனியா பொலிஸாரின் உத்தரவிற்கமைய கோவிட் – 19 தொற்றின் தாக்கத்திலிருந்து எம்மையும் எமது மக்களையும் காப்பாற்றுவதற்கு அனைத்து வர்த்தக நிலையத்தினைரையும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு வவுனியா வர்த்தகர் சங்கத்தினர் அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளனர்.

கோவிட் – 19 சுகாதார நடைமுறையினை மீறும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் வர்த்தகர்கள் ஆகிய நாமும் எமதும் பொதுமக்களின் நலனில் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும்

எனவே வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக கைகழுவும் வசதிகள் அல்லது தொற்று நீக்கி மருந்து கட்டாயம் வைப்பதுடன் வர்த்தக நிலையத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதுடன் 3மீற்றர் சமூக இடைவெளியினை பின்பற்றி கோவிட் -19 தொற்று அற்ற வவுனியாவை உருவாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு வர்த்தகர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் இன்று (05.10.2020) தொடக்கம் கோவிட் -19 சுகாதார நடைமுறையினை பொதுமக்கள் , வர்த்தக நிலையங்கள் பின்பற்ற வேண்டுமென வவுனியா பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.