வவுனியாவில் தீப் பரவல் : விரைந்து செயற்பட்ட தீயணைப்புப் படை!!

1010

தீப் பரவல்..

வவுனியா – நவகம பகுதியில் ஏற்பட்ட தீப் பரவலை கட்டுப்படுத்தி அயலில் இருந்த வீடுகளுக்கு தீயை செல்லவிடாது வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர் தடுத்துள்ளனர். நேற்று மாலை வவுனியா – நவகமவில் வயல் பகுதியில் தீ பரவியுள்ளது. இத் தீயானது தண்டவாளம் வரை பரவியிருந்தது.

வடபகுதிக்கான தண்டவாளங்களுக்கு அருகேயுள்ள பாலங்களை ஊழியர்கள் சீர்செய்து வருகின்றனர். நவகம பாலம் வேலை செய்வதற்காக பாலத்திற்கு அருகே வைத்திருந்த மரங்களும் தீக்கிரையாகியிருந்தன.

அருகில் இருந்த மக்கள் குடிமனைக்குள் பரவாதவாறு அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து விரைந்து செயற்பட்ட வவுனியா தீயணைப்பு பிரிவினர் மக்கள் குடிமனைக்குள் தீ பரவலடையாது தடுத்ததுடன், வயல் பகுதியில் ஏற்பட்ட தீப் பரம்பலையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக வி சாரணைகளை ஈரட்டை பெரியகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்