வவுனியாவில் இயற்கைச் சூழலை நாசப்படுத்தி களியாட்டங்கள் வேண்டுமா?

1283

சுவரொட்டிகள்..

குளத்தை காப்பாற்ற வேண்டியவர்களே ஆக்கிரமிப்பிற்கு துணை போவதா போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய சுவரொட்டிகள் வவுனியா நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.

குறித்த சுவரொட்டிகள் இன்று (05.10.2020) காலை தொடக்கம் வவுனியா நகர், கண்டி வீதி, மன்னார் வீதி, நூலக வீதி, வைரவபுளியங்குளம் ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்டு காணப்பட்டன.

நிலத்தடி நீருக்கும் நெல் உற்பத்திக்கும் ஆப்பு வைப்பதா அபிவிருத்தி?, இயற்கைச் சூழலை நாசப்படுத்தி களியாட்டங்கள் வேண்டுமா?, வவுனியா நகரசபையே வவுனியாக் குளத்தைக் கூறு போட்டு விற்காதே,

நீர்ப்பாசனத் திணைக்களமே குளத்தை காப்பாற்ற வேண்டியவர்களே ஆக்கிரமிப்புக்கு துணை போவதா போன்ற வாசகங்களை தாங்கிய சுவரொட்டிகளே இவ்வாறு ஒட்டப்பட்டுள்ளன.

வவுனியாக் குளத்திற்கான மக்கள் செயலனி என சுவரொட்டியின் கீழ் உரிமை கோரப்பட்டுள்ளது.