வவுனியாவில் நடைபெறவிருந்த வடக்கு மாகாண பொலிஸ் நேர்முக தேர்வு இடைநிறுத்தம்!!

826


வடக்கு மாகாணத்தில் இளைஞர், யுவதிகளை பொலிஸ் திணைக்களத்தில் இணைத்து கொள்வதற்கான ஆரம்ப நேர்முக தேர்வு நாளையதினம் (06.10.2020) வவுனியாவில் இடம்பெறவிருந்த நிலையில்,



நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் -19 நோய்த்தாக்கம் காரணமாக நேர்முகத்தேர்வு இடம்பெறமாட்டது என சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்சலால் த சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில் நாட்டின் சில மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டமும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.



இதனைடுத்து பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் பொலிஸாரின் குறைப்பாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக நாளைய தினம் வவுனியாவில் இடம்பெறவிருந்து பொலிஸ் நேர்முகத்தேர்வு இரத்து செய்யப்பட்டுள்ளதுடன்,



நேர்முகத்தேர்வுக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்சலால் த சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.