வவுனியா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

1325

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியின் கற்றல் செயற்பாடுகள் காலவரையறையின்றி நிறுத்தப்பட்டுள்ளதாக கல்லூரியின் அதிபர் ஆ.நற்குணேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் சில தினங்களுக்கு முன்னர் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்யும் 39 வயதான பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்கு வேலை செய்யும் 1400 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வெளியான முடிவுகளின் படி 1022 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

இதனை அடுத்து நாட்டில் ஏற்பட்ட கொரோனா அச்சநிலை காரணமாக இலங்கையில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரிகளில் இடம்பெற்று வந்த பரீட்சைகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக நேற்று (06.10) அறிவிக்கப்பட்டது.

இந் நிலையில் இலங்கையில் உள்ள அனைத்து தொழில்நுட்பக்கல்லூரிகளினதும் கற்றல் செயற்பாடுகள் காலவரையறையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.