வவுனியாவில் தோட்டத்தின் மோட்டரை திருடிய மூன்று இளைஞர்கள் கைது!!

1616

மூன்று இளைஞர்கள் கைது..

வவுனியா மகாறம்பைக்குளத்தில் தோட்டத்தில் இருந்த மோட்டரை திருடிய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்களை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மோட்டார் திருடப்பட்டுள்ளதாக வீ்ட்டின் உரிமையாளரினால் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினையடுத்து வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சுனில் சாந்த தலைமையிலான பொலிஸ் குழுவினர் வி சாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது மகாறம்பைக்குளம் பகுதியில் மோட்டரை விற்பனை செய்ய முற்பட்ட 28, 29, 31 ஆகிய வயதுடைய மூன்று இளைஞர்களை பொலிஸ் கைது செய்துள்ளனர்.

அவர்களிடன் மேற்கொள்ளப்படும் மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.