வவுனியா ஓமந்தையில் 6 முதிரை மரக்குற்றிகளுடன் பட்டா ரக வாகனம் மீட்பு!!

630

ஓமந்தையில்..

வவுனியா ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 6முதிரை மரக்குற்றிகளுடன் பட்டா ரக வாகனத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

பாலமோட்டை காட்டுப்பகுதியில் சில நபர்களின் நடமாட்டம் காணப்படுவதாக ஒமந்தை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சிறு குற்றத்தடுப்புபிரிவு பொறுப்பதிகாரி சுகுமார் சுகந் தலைமையிலான பொலிஸார், பாலமோட்டை – ஓமந்தை வீதியில் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது கோவிற்குஞ்சுக்குளம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் முதிரைக்குற்றிகளை ஏற்றி வந்த பட்டா ரக வாகனத்தினை பொலிஸார் மறித்தனர். இதன் போது பட்டா ரக வாகனத்தில் பயணித்தவர்கள் வாகனத்தினை அவ்விடத்திலேயே விடுத்து தப்பித்துயோடியுள்ளனர்.

அதன் பின்னர் முதிரைக்குற்றிகளுடன் காணப்பட்ட வாகனத்தினை பொலிஸார் ஒமந்தை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து வந்ததுடன் வாகனத்தின் உரிமையாளரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஒமந்தை பொலிஸார் 6 முதிரைக்குற்றிகளையும் பட்டாரக வாகனத்தினையும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குறிய நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர்.