வவுனியா ஹொரவப்பொத்தானை வீதி பூட்டு : மாற்று வீதியினை பயன்படுத்துமாறு கோரிக்கை!!

2396

ஹொரவப்பொத்தானை வீதி பூட்டு..

வவுனியாவிலிருந்து திருகோணமலைக்கு செல்லும் பிரதான வீதியான ஹொரவப்பொத்தானை வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமையினால் மாற்றுப்பாதையூடாக பயணிக்குமாறு சாரதிகளுக்கு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஹொரவப்பொத்தானை வீதியில் இன்று (09.10.2020) காலை பாரவூர்தி ஒன்று வாகனத்தினை பின்பக்கமாக செலுத்த முற்பட்ட சமயத்தில் வீதியில் காணப்பட்ட அதிஉயர் மின்கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தின் காரணமாக அதிஉயர் மின்கம்பம் உடைந்தது. அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த இலங்கை மின்சார சபையினர் உடனடியாக மின்சாரத்தினை துண்டித்ததுடன்,

வவுனியா போக்குவரத்து பொலிஸாரின் உதவியுடன் வவுனியா நகர பள்ளிவாசல் தொடக்கம் இறம்பைக்குளம் வரையிலான பாதையினை மூடி மாற்றுப்பாதையூடாக செல்லுமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தலும் வழங்கப்பட்டுள்ளது.

விபத்தினால் சேதமடைந்த அதிஉயர் மின்கம்பத்தினை மாற்றும் நடவடிக்கையில் இலங்கை மின்சார சபையினர் ஈடுபட்டுள்ளதுடன் ஹொரவப்பொத்தானை வீதியூடான போக்குவரத்து வழமைக்கு திரும்ப 3 மணித்தியாளங்கள் வரை செல்லும் எனவும் தெரிவித்தனர்.

அதிஉயர் மின்கம்பத்தினை மாற்றுவதினால் வவுனியா நகரில் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது.