வவுனியாவில் முன்னறிவித்தலின்றி நிறுத்தப்பட்ட சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு!!

729

சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு..

வவுனியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் எவ்வித முன்னறிவித்தலுமின்றி நிறுத்தப்பட்ட சிறுநீரக நோயார்களுக்கான கொடுப்பனவினால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.

சிறுநீரக நோயாளர்களுக்கு மத்திய சமூக சேவைகள் அமைச்சினால் 5000 ரூபா கொடுப்பனவும் மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் 1000 ரூபா கொடுப்பனவும் வழங்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் மத்திய சமூக சேவைகள் அமைச்சினால் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுவதினால் மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் 1000 ரூபா கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளது.

எனினும் பொதுமக்களுக்கு எவ்வித முன்னறிவித்தலும் வழங்காது வவுனியா பிரதேச செயலகம் கொடுப்பனவினை நிறுத்தியமையினால் தபால் நிலையங்களுக்கு வருகை தந்த சிறுநீரக நோயாளிகள் (முதியவர்கள் உட்பட) அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

கோவிட் -19 நோய்த்தாக்கம் நாட்டில் அதிகரித்து வருகின்ற சமயத்தில் பொதுமக்களை அசௌகரியத்திற்கு உள்ளாகிய வவுனியா பிரதேச செயலகத்தின் செயற்பாட்டிற்கு சமூக ஆர்வளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.