வவுனியா சைவபிரகாச ஆரம்பப் பாடசாலையின் மெய்வல்லுனர் போட்டி!!

495

sivaprakasa

வவுனியா சைவபிரகாச ஆரம்ப பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி நேற்று முன்தினம் (20.02) பிற்பகல் 2.00 மணியளவில் வெகு விமர்சையாக நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் திருமதி கி.நந்தபாலன் தலைமையில் பாடசாலையின் கனகரட்ணம் விளையாட்டு மைதானத்தில்; இந்நிகழ்வு இடம்பெற்றது.

இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக பிரதிக்கல்வி பணிப்பாளர் (திட்டமிடல்) செல்வி லதாங்கி அம்பிகைபாலன், கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு எம்.பி.நடராஜ் ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக சைவபிரகாச மகளிர் கல்லூரி அதிபர் செல்வி உமா இராசையா, உதவிக் கல்விப்பணிப்பாளர் உடற்கல்வி (ஜனாப் எ.எம்.சுபைர், வவுனியாவின் முன்னாள் உப நகர பிதாவும், புளொட் முக்கியஸ்தரும், கோவில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமாகிய திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களும் பங்கேற்றிருந்தனர்.