வவுனியா பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை : 10 சாரதிகளுக்கு எதிராக தண்டப்பத்திரம்!!

1112

போக்குவரத்து பொலிஸார்..

வவுனியா போக்குவரத்து பொலிஸார் நேற்று (10.10.2020) மாலை மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 10 சாரதிகளுக்கு எதிராக தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் 03 சாரதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி காமினி திஸாநாயக்க ஆலோசனைக்கமைய போக்குவரத்து பொலிஸாரினால் வவுனியா புகையிரத நிலைய வீதியில் மேற்கொள்ளப்பட்ட,

திடீர் சோதனை நடவடிக்கையின் போது இரு மணிநேரத்தில் மூன்று (03)சாரதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் பத்து (10) சாரதிகளுக்கு எதிராக தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சோதனை நடவடிக்கையில் தலைக்கவசம் சீராக அணியாமை, சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை, அதிக சத்தம், முச்சக்கரவண்டிக்கு அதிகளவான அலங்காரம்,

தலைக்கவசத்தினுள் தொலைபேசி வைத்திருந்தமை போன்ற பல்வேறு குற்றங்களுக்காகவே சாரதிகளுக்கு தண்டம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.