வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றம்!!

1489

கல்வியியற் கல்லூரி..

வவுனியா, தேசிய கல்வியியற் கல்லூரியை கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டங்கள் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த கல்லூரிக்கு இன்றிலிருந்து விடுமுறை விடுக்கப்பட்டு ஆசிரியர்கள், மாணவர்களை அந்தந்த மாவட்டங்களுக்கு இராணுவத்தினரின் பாதுகாப்புடன் பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஏற்பட்டுள்ளதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் வசித்து வரும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில் கொரோனா தொற்றாளிகள் அதிகம் இனங்காணப்பட்டு வருகின்ற நிலையில் தனிமைப்படுத்தலை மேற்கொள்வதற்காக தனிமைப்படுத்தல் நிலையங்களை அதிகரித்து வருகின்றனர்.

அதனடிப்படையில் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியும் தனிமைப்படுத்தல் நிலையமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்ததையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளிற்காக வவுனியாவில் பல்வேறுபட்ட நபர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.