காதலிக்கும் போது எடுத்த புகைப்படத்தை வைத்து திருமணமான பெண்ணின் வாழ்க்கையை கெடுத்த காதலன்!!

3518


தமிழகத்தில்..



தமிழகத்தில் காதலித்த போது எடுத்த புகைப்படங்களை அனுப்பி இளம்பெண்ணின் திருமண வாழ்க்கையை கெடுத்ததோடு, அவரை கொ டூ ர மா க அ டி த் த ந பர் கை து செ ய்யப்பட்டுள்ளார்.4



திருவள்ளூரை அடுத்த புட்லூரை சேர்ந்தவர் விஜி (29). இவரும் சந்தோஷ் சாம்ராட் என்பவரும் கல்லூரி படிக்கும்போது காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.




இந்நிலையில், திருமணம் செய்வதாக கூறி சந்தோஷ் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதால் விஜி வேறொருவரை திருமணம் செய்து கொண்டார்.


இதனையடுத்து, அவர்களது திருமண வாழ்க்கையை கெடுக்கும் வகையில் காதலித்தபோது எடுத்த புகைப்படங்களை சந்தோஷ், விஜியின் கணவருக்கு அனுப்பினார். இதனால் விஜிக்கு விவாகரத்தானது.

இந்நிலையில், காதலித்த விடயம் முதல் திருமணம் நடந்து விவாகரத்து ஆனது வரை அனைத்து தகவல்களையும் சொல்லி விஜிக்கு 2வது திருமணம் செய்ய அவரது தந்தை ஏற்பாடு செய்துள்ளார்.


இதனையடுத்து சந்தோஷ் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் எனவும் ரூ 2 லட்சம் பணம் கொடுத்தால் வெளியிட மாட்டேன் என்று விஜியின் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதனால் அ திர்ச்சி அடைந்த விஜி இதுகுறித்து 2வதாக திருமணம் செய்ய உள்ள மாப்பிள்ளையிடம் கூறினார். அதற்கு அவர் இந்த விவகாரத்தை திருமணத்திற்கு முன்பே முடிக்க வேண்டும். இல்லையேல் திருமணம் வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது.

இதனையடுத்து, விஜி, சந்தோஷை சந்தித்து பேச சென்ற போது, அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜியின் தலைமுடி மற்றும் கையில் ச ர மா ரி யா க வெ ட் டி னா ர். பின்னர் அங்கிருந்து த ப் பி த லை ம றை வா னா ர். இதுகுறித்து விஜி அளித்த புகாரின் பேரில் பொலிசார் சந்தோஷை கைது செய்துள்ளனர்.