வவுனியாவில் பற்றி எரியும் வயல்கள் : புகைமண்டலமாக காட்சியளிக்கும் வீதிகள்!!

1506

பற்றி எரியும் வயல்கள்..

வவுனியாவில் அறுவடை செய்யப்பட்ட வயல்கள் தற்போது எரியூட்டப்பட்டு வருகின்றமையால் அதனை சூழவுள்ள பகுதிகள் பெரும் புகை மூட்டமாகக் காணப்படுகின்றன.

புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகே ஏ9 வீதியில் அமைந்துள்ள விவசாயத்திணைக்களத்தின் அரசாங்க விதை உற்பத்தி பண்ணைக்கு சொந்தமான வயல்கள் கடந்த சில நாள்களாக எரியூட்டப்பட்டு வருகின்றன.

வயல்கள் எரியூட்டப்படுவதால் பேருந்து நிலையப் பகுதி , ஏ-9 வீதி என்பன புகைமூட்டமாகக் காட்சியளிக்கின்றன. அதனால் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

தற்போது வெப்பமான காலநிலை வவுனியாவில் நிலவி வருகின்ற நிலையில் இவ்வாறு வயல்கள் எரியூட்டப்படுதால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.