வவுனியா பிரதேச செயலக ஊழியர்கள் பாலமோட்டை கிராம மக்களோடு இணைந்து நேற்று( 22.02) சிரமதானத்தில் ஈடுபட்டதுடன் ஆலையங்களிலும் பொது இடங்களிலும் பயன்தரு மரக்கன்றுகளை நடுகைசெய்திருந்தனர்.
பிரதேசசெயலாளர் கா.உதயரசா தலைமையில் நடைபெற்ற இன்நிகழ்வில் நிர்வாக உத்தியோகத்தர் சமுகசேவை உத்தியோகத்தர் சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கிராம சேவையாளர்கள் கலந்து கொண்டதுடன் மக்களுக்கான நடமாடும் சேவையொன்றையும் நடாத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.