வவுனியா பெரியகட்டு மக்கள் அடிப்படை வசதிளை வழங்ககோரி போராட்டம்!!(படங்கள்)

382


மீள்குடியேற்றம் செய்யப்பட்டு மூன்று வருடங்களாகியும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என தெரிவித்து வவுனியா பெரியகட்டு மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பெரியகட்டு கிராமத்தில் இடம்பெற்ற இப் போராட்டத்தில் அக் கிராமத்தில் குடியேறியுள்ள மக்கள் பங்கேற்றிருந்தனர்.



இதன்போது நாங்களும் இலங்கை பிரஜைகளே ஏன் எங்கைள புறக்கணிக்கின்றீர்கள், எங்களுக்கும் இந்திய வீட்டுத்திட்டம் வேண்டும், எமது வாழ்வாதாரத்திற்கு யார் உதவுவது, ஜனசக்தி சேமிப்பு நிதிக்கு என்ன நடந்தது, மூடப்பட்ட 80 கிணறுகளும் புதைகுழிகளா என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

C1 C2 C3