காற்றின் வேகம் இன்னும் குறையவில்லை: மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

349

புத்தளத்தில் இருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 40 தொடக்கம் 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், காலியில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற் பிரதேசங்கள் மற்றும் யாழ்ப்பாணம் தொடக்கம் திருகோணமலை வரையான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50-70 கிலோமீற்றர் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை, காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும் என்பதால் மீனவர்கள் மற்றும் கடற் தொழிலாளர்களை அவதானமாக செயற்படுமாறும் காலநிலை அவதான நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.