வவுனியா பூந்தோட்டம் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த மூவருக்கு கொரோனா : வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டது!!

4009

வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டது..

வவுனியா, பூந்தோட்டம் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து வவுனியா வைத்தியசாலைக்கு நோயாளர் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு தற்காலிகமாக காலை முதல் மூடப்பட்டுள்ளது.

பூந்தோட்டம் தேசிய கல்வியற் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த மூவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து வவுனியா வைத்தியசாலைக்கு நோயாளர் வருவதற்கான அனுமதி மறுக்கப்பட்டு பிரதான வாயில்கள் மூடப்பட்டுள்ளதுடன், தாதியர்ரகள், வைத்தியர்கள் மட்டும் உட் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதனால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற மற்றும் கிளினிக் என்பவற்றுக்கு வருகை தந்த பலரும் திரும்பிச் செல்வதை அவதானிக்க முடிகிறது.