வவுனியா வைத்தியசாலையில் சமூகப் பரவல் இல்லை : பணிப்பாளர் நந்தகுமார்!!

683

வவுனியா வைத்தியசாலை..

வவுனியா வைத்தியசாலையில் கொவிட்-19 சமூக பரவல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என வைத்தியசாலையின் பணிப்பாளர் க.நந்தகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பூந்தோட்டம் தனிமைப்படுத்தல் மையத்தில் கொரோனோ தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் உரிய பாதுகாப்பு நடைமுறைகள் பேணப்பட்டே வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டிருந்தனர்.

அதன் மூலம் சமூக பரவல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தொற்று நீக்கல் செயற்பாட்டிற்காகவே வைத்தியசாலை பிரதான வாயில் மூடப்பட்டுள்ளது. ஏனைய சிகிச்சை செயற்பாடுகள் வழமைபோல நடைபெற்று வருகின்றது.

ஊழியர்கள் பயணிக்கும் மற்றைய வாயில் வழியாக நோயாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். எனினும் பொதுமக்கள் முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது என குறிப்பிட்டுள்ளார்.