விமான விபத்தில் உயிரிழந்த தந்தை : மகளின் திருமணத்திற்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!!

2608

கேரளாவில் விமான விபத்தில் உ யிரிழந்தவரின் மகளின் திருமணத்திற்கு துபாயில் இருக்கும் இந்திய தொழிலதிபர் இன்ப அ திர்ச்சி கொடுக்கும் விதமாக திருமண பரிசு அமைந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ஆம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து கேரளா மாநிலம் கோழிக்கோட்டிற்கு 191 பயணிகளுடன் புறப்பட்டு வந்த ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம்,

தரையிரங்கும் போது விபத்தில் சிக்கி, இரண்டாக உடைந்து நொறுங்கியதால், விமானத்தில் இருந்த விமானி மற்றும் துணை விமானி என 21 பேர் உ யிழந்தனர்.

இந்த விமான விபத்தில், Cherikka Parambil Rajeevan என்ற 61 வயது நபரும் உ யிரிழந்தார். துபாயில் ஒரு கார் பட்டறையில் ஸ்ப்ரே பெயிண்டராக 20 ஆண்டுகள் பணியாற்றி வந்த, இவர் சொந்த ஊருக்கு திரும்பிய போது விபத்தில் உ யிரிழந்தார்.

இந்த விமான விபத்தைத அறிந்த Al Adil Trading கம்பெனியின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான Dhananjay Datar உ யிரிழந்தவ ர்களின் குடும்பங்களுக்கு உதவுவதாகவும், இதற்காக இந்திய மதிப்பில் 2 மில்லியன் ரூபாய் அவர் உதவ முன்வந்துள்ளதாகவும் செய்தி வெளியானது.

இந்நிலையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், Dhananjay Datar கடந்த வாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவியுள்ளார்.

இதில், உயிரிழந்த Cherikka Parambil Rajeevan குடும்பத்திற்கும் உதவியுள்ளார். அவரின் ம ரணத்திற்கு பின் Cherikka Parambil Rajeevan-ன் மகளான அனுஸ்ரீயின் திருமணம் ஒத்திவைக்கைப்பட்டு, அதற்கு தயாராகி வந்த நிலையில், Dhananjay Datar -ன் இந்த உதவி அவர்களின் குடும்பத்திற்கு பெரிதும் உதவியாக இருந்துள்ளது.

ஆனால், அனுஸ்ரீயின் திருமணத்தை அறிந்தவுடன், அவர் மேலும் ஒரு லட்சம் ரூபாய் திருமண பரிசாக கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

இந்த பணத்தை வைத்து, அவர்கள் அனுஸ்ரீக்கு இன்னும் கொஞ்சம் தேவையான தங்க நகைகளை வாங்கியதுடன், திருமணம் நடைபெறும் அவர்கள் வீட்டில் சில பராமரிப்பு வேலைகளை செய்துள்ளனர்.

மேலும், அவர் பா திக்கப்பட்டவர்களின், குடும்ப உறுப்பினர்களின் சரியான தொடர்புகள் கிடைக்கவில்லை எனவும், இதற்காக வாட்ஸ்அப்பில் ஒன்றாக குழுவாக அமைக்கப்பட்டு, அனைத்து குடும்பங்களுக்கும் வாக்குறுதியளிக்கப்பட்ட தொகையை கொடுப்பதாக அவர் கூறியுள்ளார்.

அதே ஆதரவை விமானி மற்றும் இணை விமானியின் குடும்பங்களுக்கும் வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Cherikka Parambil Rajeevan குடும்பத்தினர் கூறுகையில், பிப்ரவரி மாதம் அனுஸ்ரீயின் திருமண நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ள 10 நாட்கள் விடுப்பு எடுத்தார். நாங்கள் ஜூலை மாதம் திருமணத்தை நடத்த திட்டமிட்டிருந்தோம்.

அவர் தனது டிக்கெட்டையும் முன்பதிவு செய்திருந்தார். ஆனால், கொரோனா நிலைமை காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.
அவர் முன்பு இரண்டு முறை வர முயன்றார், ஆனால் அது வீண் ஆகிவிட்டது.

இறுதியாக, அவர் இந்த விமானத்திற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்தார், பின்னர் நாங்கள் செப்டம்பர் மாதம் திருமணத்தை நிர்ணயித்தோம் என்று கூறியுள்ளனர். இந்த திருமணம் சுமார் 40 பேர் மட்டுமே கலந்து கொள்ளும் திருமணம் என்று கூறப்பட்டுள்ளது.