வவுனியா மாவட்ட ஜனாதிபதி சாரணர் சங்கமும் மாவட்ட திரிசாரண குழுவும் இணைந்து நடாத்திய இரத்ததான நிகழ்வு!!(படங்கள்)

313

சாரண தந்தை பேடன் பவல் பிரபுவின் 157 வது பிறந்த தினத்தை முன்னிட்டு வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் மாபெரும் இரத்ததான நிகழ்வை வவுனியா மாவட்ட ஜனாதிபதி சாரணர் சங்கமும் மாவட்ட திரிசாரண குழுவும் இணைந்து நேற்றைய தினம் சிறப்பாக வம் சமூக விழிப்புணர்வுடன் நடாத்தினர்.

பெருமளவான குருதி கொடையாளர்களின் பங்களிப்புடன் நடைபெற்றது. இவ் நிகழ்வு ஜனாதிபதி சாரண சங்கத்தின் உப தலைவர் Dr.A.திலீப்குமார் தலைமையில் நடைபெற்றது.

இன் நிகழ்வில் மாவட்ட ஆணையாளர் திரு எம்.எஸ்.பத்மநாதன் மற்றும் சாரண சங்க உப தலைவர் திரு.பூலோகசிங்கம் , இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் வவுனியா மாவட்ட தலைவர் திரு.அன்ரன் புனிதனாயகம் (சிரேஷ்ட சட்டத்தரணி), கிளை உத்தியோகஸ்தர் திரு.ரமேஷ் , உதவி மாவட்ட ஆணையாளர்களான திரு.ஆரூரன் (தெற்கு வலயம் ), திருமதி. செல்வராஜா , திரு. பொன்னையா (நிர்வாகம்), திரு.கமலகுமார் (நிகழ்ச்சி), திருமதி. நடேசமூர்த்தி, திரு.காண்டீபன் (திரிசாரணர், ஊடக மற்றும் பொது தொடர்புகள்) திரு.ஜதீஸ்கரன் (அங்கத்துவ வளர்ச்சி) திரு .கஜேந்திரன்(பயிற்சி) ஆகியோர் கலந்து நிகழ்வினை சிறப்பித்தனர்.

இன் நிகழ்விற்கு தமது குருதியை சமூகத்தில் உயிர்காக்கும் இரத்ததானத்துக்கு வழங்கிய அனைத்து கொடையாளிகளுக்கும், மற்றும் வவுனியா பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் வைத்திய சாலையின் இரத்தவங்கியை சேர்ந்த Dr.துசானி சக ஊழியர்கள் , நிகழ்விற்கு வருகை தந்த இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி சாரணர் மன்றம் மற்றும் திரி சாரணர்கள் பங்குபற்றிய பாடசாலைகளின் சாரணர்கள் அனைவருக்கும் மாவட்ட ஜனாதிபதி சாரணர் சங்கத்தின் மற்றும் திரிசாரண அமைப்பின் சார்பான மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றனர்.

1 2 3 4 5 6 7 8