மட்டக்களப்பு மாவட்டத்தின் சின்ன உப்போடை லேக் வீதியில் இயற்கை அழகுடைய வாவியின் நடுவே அமைந்துள்ள சிறு தீவை அழகுபடுத்தி சகல வசதிகளும் கொண்ட சர்வதேச தரத்திலான “ஈஸ்ட் லகூன்” என்ற பெயரில் நட்சத்திர ஹோட்டல் ஒன்று 35 கோடி ரூபா செலவில் கட்டப்பட்டு இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
பிரபல வர்த்தகரும் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சங்க முன்னாள் தலைவருமான செல்வராசாவின் முயற்சியின் பயனாக ஈஸ்ட் லகூன் என்ற இந்த ஹோட்டல் நிர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த திறப்பு விழாவில் பல அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத், கிழக்கு மாகாண அமைச்சர் நஸீர் அகமட், முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பிரபல வர்த்தகரும் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சங்க முன்னாள் தலைவருமான செல்வராசாவின் முயற்சியினை பாராட்டி மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத்தினரால் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.
அத்துடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஸவுக்கு செல்வராசாவினால் நினைவுச்சின்னம் வழங்கிவைக்கப்பட்டது.