ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வவுனியா, பம்பைமடு இராணுவ முகாமைச் சேர்ந்த லெப்டினன்ட் கேர்ணல் பதவி நீக்கப்பட்டுள்ளார்.
இராணுவத் தளபதியின் ஆலோசனைப்படி குறித்த லெப்டினன்ட் கேர்ணல் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
வட மத்திய மாகாண விசேட பொலிஸ் அதிகாரிகளினால் சந்தேகநபரான லெப்டினன்ட் கேர்ணல் மூன்று கிராம் ஹெரோயின் வைத்திருந்த நிலையில் நேற்று மாலை கைது செய்யப்பட்டார்.
குறித்த லெப்டினன்ட் கேர்ணலுக்கு ஹெரோயின் வழங்கிய நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து இராணுவ பொலிஸ் விசாரணையை மேற்கொண்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் ருவன் வணிகசூரிய மேலும் தெரிவித்தார்.