திருடச் சென்ற இடத்தில் குறட்டை விட்டு தூங்கிய திருடன்!!

375

Thefஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மவுண்ட் டோரா பகுதியில் தனியாக வசித்து வருபவர் ஜூடித் ஸ்மோலின்ஸ்கி.

இரண்டு நாட்களுக்கு முன் காலை, ஜூடித் சமையலறையில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது அவரது அறையிலிருந்து குறட்டை சத்தம் கேட்டுள்ளது. ஜூடித் சென்று பார்க்கையில், சோபா மீது போர்வையை போர்த்திக்கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த இளைஞரை கண்டு அதிர்ந்தார்.

பின் போர்வையை விலக்கி அவனை எழுப்ப முயற்சித்த போது அவன் கையில் கத்தி வைத்திருந்ததை கண்ட ஜூடித், போலீசுக்கு புகார் தெரிவித்தார். விரைந்து வந்த பொலிசார் விசாரித்ததில் அந்த இளைஞன் கொள்ளையடிக்க வந்தவன் என்பது தெரியவந்தது.

அந்த கொள்ளையன் திருட வந்த இடத்தில் பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த மதுபானத்தை குடித்துவிட்டு போதையில் குறட்டைவிட்டு தூங்கியுள்ளான் என்பது தெரிந்தது.

இதையடுத்து கொள்ளையன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.