வவுனியாவில் போலி ஸ்ரேலிங் பவுண்களுடன் இருவர் கைது!!

685

Arrestedவவுனியாவில் போலி ஸ்ரேலிங் பவுண்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் வவுனியா பஸ் தரிப்பிடத்தில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து போலி ஐம்பது ஸ்ரேலிங் பவுண் தாள்கள் 06 கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். வவுனியா செட்டிக்குளம் பகுதியை சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.