இலங்கை அணிக்கு இங்கிலாந்தில் உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை – கருணாதிலக்க அமுனுகம..!

776

இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற இலங்கை கிரிக்கெட் அணிக்கு விடுதலைப் புலிகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக இலங்கை அரசாங்கம் ஏற்கனவே பிரித்தானிய அரசாங்கத்துக்கு எச்சரித்திருந்தது.

இந்தநிலையில் அங்கு இலங்கை அணிக்கு எதிராக மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளதாக இலங்கையின் வெளியுறவு துறை அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அனுமுகம இதனை தெரிவித்துள்ளார்.

மைதானத்தில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக சுலோகங்கள் காட்டப்பட்ட அதேநேரம் ஆட்டம் முடிந்த பின்னர் இலங்கை அணியினர் பயணம் செய்த பஸ் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் மறிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய பாதுகாப்பு பிரிவினர் பிரசன்னமான நிலையிலேயே இந்த அத்துமீறல்கள் இடம்பெற்றுள்ளன. எனவே இலங்கை அணிக்கு இங்கிலாந்தில் உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று அமுனுகம குற்றம் சுமத்தியுள்ளார்.