நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!

609

கொரோனா..

இலங்கைக்குள் மேலும் 272 கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இதில் 03 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தும், 269 பேர் தொற்றாளிகளின் தொடர்புகளில் இருந்தும் கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரைக்குமான காலப்பகுதியில் கொரோனா தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 11ஆயிரத்து 607 ஆக உயர்ந்துள்ளது.

6005 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 5581 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – 15 பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.