வவுனியாவில் அதிகாலையில் மோட்டார் சைக்கிள் விபத்து : இளைஞர் படுகாயம்!!

1413

கோர விபத்து..

வவுனியா சூடுவெந்தபுலவு பகுதியில் வீதியில் உறங்கிக்கொண்டிருந்த மாட்டுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்று (05.11.2020) அதிகாலை 12.40 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வேலைக்கு சென்ற குறித்த இளைஞன் கடமைகளை முடித்துக்கொண்டு வீரபுரம் நோக்கி வவுனியா செட்டிக்குளம் பிரதான வீதியூடாக சென்றுள்ளார்.

சூடுவெந்தபுலவு பகுதியினை அண்மித்த சமயத்தில் வீதியில் உறங்கிக்கொண்டிருந்த மாட்டுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளினை ஓட்டிச் சென்ற 26 வயதுடைய இளைஞன் படுகாயமடைந்த நிலையில் பொதுமக்களின் உதவியுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த உலுக்குளம் பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் மோட்டார் சைக்கிளை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர்.