வவுனியா A9 வீதி விபத்தில் ஆசிரியை பலி : பொலிசாருடன் மக்கள் முரண்பாடு!!(படங்கள்) 2ம் இணைப்பு..

465

வவுனியாவில் இருந்து பளை நோக்கி சென்றுகொண்டிருந்த புகையிரதப் பணியில் ஈடுபடும் இந்திய நிறுவனத்திற்கு சொந்தமான டிப்பர் வாகனமே பாடசாலை விட்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்த ஆசிரியையின் மோட்டார் சைக்கிளில் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த ஆசிரியை வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வவுனியா புதிய சின்னக்குளம் அ.த.க பாடசாலையில் கல்விகற்பிக்கும் ஒரு வயது குழந்தையின் தாயான சுகன்யா அகிலன் (38) என்பவரே உயிரிழந்தார் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை அப்பகுதி மக்கள் விபத்து சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸாருடன் முரண்பட்டுக்கொண்ட நிலையில் சம்பவ இடத்திற்கு கலவரத்தடுப்பு பொலிஸார் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வருகை தந்து வவுனியா பொலிஸாரிடம் சம்பவம் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

1 2 3 4 5