சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் ரூ.9000 கோடியாக சரிவு..!

825

சுவிட்சர்லாந்து வங்கிகளில் ரகசிய கணக்குகளில் பதுக்கப்பட்டிருக்கும் இந்தியர்க ளின் கருப்பு பணம் ரூ.14,000 கோடியில் இருந்து ரூ.9000 கோடியாக குறைந்தது. கருப்பு பணத்தின் சொர்க்கமாக சுவிஸ் நாட்டு வங்கிகள் உள்ளன. இங்கு வாடிக்கையாளர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படுவதால், பல்வேறு நாட்டினரும் கருப்பு பணத்தை முதலீடு செய்துள்ளனர். பெயர் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டாலும் எந்த நாட்டில் இருந்து எவ்வளவு முதலீடுகள் வந்துள்ளன என்பதை அந்நாட்டு ரிசர்வ் வங்கியாக செயல்படும் சுவிஸ் நேஷனல் பாங்க் ஆண்டுதோறும் வெளியிடுகிறது.

இதன்படி, கடந்த 2006ம் ஆண்டில் இந்தியர்கள் சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைத்திருந்த கருப்பு பணம் ரூ.41,000 கோடியாக (6.5 பில்லியன் சுவிஸ் பிராங்க்) இருந்தது. இந்நிலையில், பல்வேறு நாடுகளில் இருந்து சுவிஸ் அரசுக்கு கருப்பு பண முதலை கள் பற்றி தகவல் தருமாறு நெருக்கடி கொடுக்கப்பட் டது. இதையடுத்து, கருப்பு பணம் பதுக்கல் குறையத் தொடங்கியது.

கடந்த ஆண்டு நிலவரப்படி, சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட இந்தியர்களின் கருப்பு பணம் வெறும் ரூ.14,000 கோடியாக குறைந்தது. இது இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டது. இந்நிலையில், ஜுரிச்சில் சுவிஸ் நேஷனல் வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் முதலீடு ரூ.9000 கோடியாக(1.42 பில்லியன் சுவிஸ் பிராங்க்) குறைந்துள்ளது.

இதில் 1.34 பில்லியன் பிராங் இந்தியர்கள் மற்றும் இந்திய நிறுவனங்கள் நேரடியாக செய்துள்ள முதலீடு. மீதி 77 மில்லியன் பிராங், மறைமுகமாக வேறு நிறுவன பெயரில் செய்யப்பட்ட முதலீடு. அதே போல், உலகம் முழுவதிலும் இருந்து செய்யப்பட்டுள்ள முதலீடும் 1.4 டிரில்லியன் பிராங்க் ஆக குறைந்துள்ளது.