இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் ஆரோக்கியமான குழந்தை பெற்ற பெண்!!

637

கொரோனா..

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கர்ப்பிணி பெண் ஒருவர் ஆரோக்கியமாக குழந்தை பெற்றுள்ளார். கொழும்பு ஆரம்ப வைத்தியசாலையிலேயே அவர் குழந்தை பெற்றுள்ளார்.

சிசேரியன் சத்திர சிகிச்சை ஊடாக அவர் இந்த குழந்தையை பிரசவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சத்திர சிகிச்சைக்காக 20 பேர் கொண்ட வைத்திய குழுவொன்று செயற்பட்டுள்ளார்கள் என சத்திர சிகிச்சை மேற்கொண்ட விசேட வைத்தியர் மயுர மானதெவொலகே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான தாய் ஒருவர் ஆரோக்கியமான முறையில் குழந்தை பெற்ற இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.