வவுனியா கருமாரி அம்மன் ஆலயத்தில் கொரோனா தாக்கத்தில் இருந்து விடுபட விசேட பூஜை வழிபாடு!!

1150

விடுபட விசேட பூஜை வழிபாடு..

கொரோனா தாக்கத்தில் இருந்து விடுபட வவுனியா, குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு இன்று(08.11.2020) இடம்பெற்றது.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால்,

இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும், கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக, அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பிரார்த்தனை வழிபாடுகளில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் வவுனியா, குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலயத்தில் ஆலயத்தின் பிரதமகுரு பிரபாகரக் குருக்கள் தலைமையில் இவ் விசேட பூஜை வழிபாடு இடம்பெற்றது.

இதன்போது நாட்டிற்கு ஆசிவேண்டியும் கொரோனா தாக்கத்தில் இருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் காத்து, அவர்களுக்கு நீண்ட ஆயுள் வேண்டியும் இந்த யாகம் வளர்த்து விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது. கருமாரி அம்மனுக்கு தீபமேற்றி மலர்தூபி இதன்போது வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், பிரதி பொலிஸ்மா அதிபர் லால் செனவிரட்ன, வவுனியா பிரதேச செயலாளர் ந.கமலதாசன்,

தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார், செட்டிகுளம் இந்து கலாசார உத்தியோகத்தர் சிவ.கஜேந்திரகுமார், சமூக ஆர்வலர்களான விக்னா, குமார், அரச அதிகாரிகள், ஆலய நிர்வாகத்தினர், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.