ராட்சத மாம்பழத்தை காணவில்லை அவுஸ்திரேலியாவில் தேடுதல் வேட்டை தீவிரம்!!

330

Mango

அவுஸ்திரேலியாவில் 10 டன் எடை கொண்ட ராட்சத மாம்பழம் காணாமல் போனதால் தேடுதல் வேட்டை தீவிரமாகியுள்ளது.

கங்காரு நாடு என்று அழைக்கப்படும் அவுஸ்திரேலியாவின் மக்கள் பிரபல சுற்றுலா தலங்களில் பிரமாண்ட சிற்பங்களையும், நினைவுச் சின்னங்களையும் நிறுவி பார்வையாளர்களை கவரும் கலையில் கை தேர்ந்தவர்கள்.

ராட்சத வாழைப்பழம், ராட்சத இறால் போன்ற கலைநயம் மிக்க பல சிற்பங்களை நாடு முழுவதும் நிறுவியுள்ள அவுஸ்திரேலிய நாட்டின் சுற்றுலா துறை, கடந்த 2002ம் ஆண்டு குவீன்ஸ்லாந்து பகுதியில் 10 டன் எடையில் 30 அடி உயரம் கொண்ட ராட்சத மாம்பழத்தை கண்ணாடி இழை உலோகத்தில் உருவாக்கி வைத்திருந்தது.

சுமார் ஒரு லட்சம் அவுஸ்திரேலிய டொலர்கள் செலவில் 3 மாடி கட்டிடத்துக்கு இணையாக கம்பீரமாக நிமிர்ந்து நின்ற அந்த மாம்பழம் இரவோடு இரவாக காணாமல் போய்விட்டது.

இது பற்றிய தகவல் அறிந்த சுற்றுலா துறை அதிகாரிகள் விரைந்தோடி வந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தபோது அவர்கள் கண்ட காட்சி திடுக்கிட வைத்தது.

நள்ளிரவு 2 மணியளவில் ராட்சத கிரேனுடன் அப்பகுதிக்கு வந்த சிலர் அந்த மாங்காய் சிற்பத்தை பீடத்துடன் பெயர்த்து எடுத்து சென்ற காட்சி கமெராவில் பதிவாகியிருந்தது.

இதுகுறித்து சுற்றுலா துறை அதிகாரிகள் கூறுகையில், இவ்வளவு பெரிய ராட்சத மாம்பழத்தை திருடி சென்றவர்கள் அதை அவ்வளவு சுலபமாக மறைத்து வைக்க முடியாது.

விரைவில் அந்த சமூக விரோதிகள் பிடிபட்டு விடுவார்கள் என்றும் மாம்பழத்தையும் மீட்டு பழைய இடத்திலேயே நிறுத்தி வைப்போம் எனவும் கூறியுள்ளனர்.