நேற்று 5 பேர் மரணம், இன்று 3 பேர் மரணம் : இலங்கையில் தொடரும் கொரோனா மரணங்கள்!!

537


கொரோனா..



கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். அரசாங்க தகவல்கள் திணைக்களம் சற்று முன்னர் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



இதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44ஆக அதிகரித்துள்ளது. கொழும்பு – 11ஐச் சேர்ந்த 40 வயதுடைய ஆணொருவரும்,




களனி பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மேலும், இன்று இத்துடன் மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் நேற்றையதினம் ஐந்து மரணங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இதேவேளை இன்று மாத்திரம் இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து 646 பேர் குணமாகிவீடுகளுக்கு திரும்பியதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரைக்குமான காலப்பகுதியில்கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 10183ஆக உயர்ந்துள்ளது.